Hinduism

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 மார்ச், 2010

ஆத்ம தியாகம்

ஆத்ம தியாகம்

தான் என்பதை தானம் செய்து

மானம் காத்து வானம் உய்வது

ஆத்ம தியாகம்.

வியாழன், 25 மார்ச், 2010

காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும் அமைந்திருக்கிறது. பரப்பிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்குப் பல காயத்ரீ மந்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளைத் தேவீ காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்பிரமணிய காயத்ரீ, கணேச காயத்ரீ என்று பாகுபடுத்தலாம். இத்தனைவிதக் காயத்ரிகளுள் நாடு முழுதுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொதுவாக இருந்துவருகிற காயத்ரி ஒன்றேயாம். அது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப் படுகிறது. இனி, பரமஹம்ச காயத்ரீ என்பது ஒன்றுண்டு; அது துறவிகளுக்கு உரியதாகும். துயவியர்கள் உட்பட வழிபாடு செய்கின்ற மக்கள் எல்லார்க்கும் பொதுவாக இருப்பது சூரிய காயத்ரி.

ஒரு மந்திரத்தினுடைய அர்த்தம் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் அதை உச்சரிக்கின்ற அளவு உச்சரிக்கின்றவர்களை அது பக்குவப் படுத்துகிறது. அந்த வல்லமை மந்திர சக்தி என்று சொல்லப் படுகிறது. மந்திரத்தின் ஓசைக்கு அலாதியான சக்தி இருக்கிறது. இறைவனுய குறிப்பிட்ட திருநாமம் மந்திரமாகிறது. ”ஓம் நம்: சிவாய” என்பது மந்திரம். “ஓம் நமோ நாராயணாய” என்பது மந்திரம். இவை சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் உரிய மந்திரங்களாம். பிரம்ம காயத்ரியை எந்தத் தெய்வத்திற்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தெய்வத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது தத்துவ உபாசனை பண்ணுகிறவர்களும் இதை மந்திரமாக வைத்துக் கொள்ளலாம். இது மனிதனைப் பாரமார்த்திக உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது.

சூரிய காயத்ரி

ஒம்
பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.


1. வினாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக ப்ரசோதயாத்
3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பந்யைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்
6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்
7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்
8. ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்
9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்
11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
15. ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
16. ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
17. நந்தீஸ்வரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்
18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்
19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்
20. ஸ்ரீ காளி காயத்ரி
ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்
21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவ ப்ரசோதயாத்
22. காலபைரவர் காயத்ரி
ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

23. சூரிய காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்
24. சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
25. அங்காரக காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக ப்ரசோதயாத்
26. புத காயத்ரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
27. குரு காயத்ரி
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
28. சுக்ர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
29. சனி காயத்ரி
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனி ப்ரசோதயாத்
30. ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
31. கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்
32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

சனி, 16 ஜனவரி, 2010

நவகிரக கோவில்கள்

நவகிரக கோவில்கள்




நன்றி: பொதிகை தொலைக்காட்சி மற்றும் Youtube சங்கர்நாதன்.

வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்
உலக தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்.



பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட,
ஆனந்தமாய் பொங்கும் பால் அனைவருக்கும்
ஆனந்தத்தை தந்திட
அவனியில் வரும் தைமகளே! உன் வரவு நல்வரவு ஆகுக!
அனைவருக்கும் இனிக்கும் கரும்பின்,
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலின் சுவை போன்ற
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

புதன், 30 டிசம்பர், 2009

வைராக்கியம் எனும் வில்லை எடு........


வைராக்கியம் எனும் வில்லை எடு



வைராக்கியம் என்னும் வில்லை எடு

நம்பிக்கை என்ற நானை ஏற்று

தவிடு போடியக்கு துஷ்டசக்திகளை

தகர்த்தெறி அதர்மத்தை

வியாழன், 24 டிசம்பர், 2009

சதுரகிரி புகழ் பாமாலை




மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே
சதுரகிரிவாழ் சித்தர்களுக்கு சேவைபுரிவோனே.....
மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே

சதுரகிரி வாரீர் மக்களே சதுரகிரி வாரீர்
லிங்க ஸ்வரூப தேவனைக் கண்டு
மனம் மகிழ வாரீர்.

மலையில் பல வித அற்புதங்களை நிகழ்த்தும் சித்தர்கள்
பல வித ரூபங்களில் நம்மை ஆட்கொள்ள வருவார்.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

ஆசிர்வாத வினாயகரும் அன்பைப் பொழிவாரே
அன்பைப் பொழிந்து மலையேறவும் அனுமதி தருவாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

பக்தருக்கெல்லாம் யோகம் அருள்வாள் யோக காளியம்மன்
அவளை நாமும் தொழுது வணங்கி மலையேறுவோமே.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

மலையடிவாரத்தில் காவல் புரியும் கருப்பசாமியே...
கருப்ப சாமிக்குத் துணையாய் நிற்கும் பேச்சியம்மனே.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

அந்தக் காலத்தில் குதிரைகளெல்லாம் தாண்ட முடியாத
குதிரை ஊற்றைக் காண நீங்கள் மலையேறி வாரீர்

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

மலை வளம் கண்டு மனமும் நல்ல மகிழ்ச்சியடையும் பாரீர்
மகிழ்ச்சியின் எல்லையை அடையும் முன்னே வழுக்குப்பாறை வருமே......
மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையும் அங்கு உண்டு.....
பஞ்சாட்சரத்தின் துணையைக் கொண்டு கடக்க வேண்டுமே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

அத்திரி மகரிஷி அழகாய் அமைத்த வனமும் இங்கு உண்டு....
கோணலாகச் செல்லும் இடமே கோணத்தலைவாசல்....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

பசுவே வந்து பாலைச் சொரிந்து சிவனுக்களித்த இடம்....
காராம் பசுத்தடம் என்ற பெயரால் அழைக்கப்படுகிற்து.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

காட்டற்று வெள்ளத்தை கோரக்க முனியும் கைகளால் தடுத்து......
கட்டுப்படுத்திய இடத்தில் அவரின் குகையைக் காணலாமே....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

ஹரிஹரன் என்ற பேதம் நீக்கி உண்மை உலகறிய....
சங்கர நாராயணராய் காட்சி அருளினாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

கணக்கற்ற மூலிகை கலந்த நன்னீர் நாவல் மரத்தடியில்
நாமும் கைகளால் அள்ளிப் பருகி நன்மையடையலாமே

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

மூலிகை வனத்தை முழுமையாய் அடைய நினைத்த அசுரர்களை
விரட்டி வனத்தைக் காப்பற்றவே வன காளி வந்தாள்

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......
பலாமரத்தின் நிழலில் நின்று காவல் புரியும் தெய்வம்......
பலாவடிக் கருப்பர் என்றே போற்ற்ப்படுகின்றார்.

தைலக் கிணற்றையும் ரசவாதத்தையும் வனத்தில் மறைத்துவைத்து காவல் செய்து வனத்தையும் இன்றும் காப்பாற்றுகின்றார்.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

அகத்திய முனியால் அன்பாய் இங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்ட......
சுந்தரமூர்த்தி லிங்கத்தை நீங்கள் வணங்க வாருங்கள்....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

தேவலோக மக்கள் செய்த தவற்றை உணர்த்தி இங்கு
சுந்தர மகாலிங்கமே வந்து மோட்சம் அருளினாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

லிங்க ரூப தேவியாய் வந்து சிவனை அடைந்த அம்மன்.
பக்தருக்கெல்லாம் மகிழ்ச்சி அருள்வாள் ஆனந்த வள்ளியம்மன்

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......


அர்த்தநாரிப் பட்டம் வேண்டி அன்னை தவமிருக்க
சந்தன மரத்தின் அடியில் லிங்க ப்ரதிஷ்டை செய்தாளே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

சக்தி சிவம் இரண்டும் ஒன்றே என்று வரமும் தந்தார்
தன் தேகத்தினில் உமையவளுக்கும் பாகம் தந்தாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......



கஜமுகனும் குருபரனும் அருகில் அமர்ந்திருக்க
சந்தன மகாதேவியாய் காட்சி தந்தாளே

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

நன்மை தீமை கலந்து அளிக்கும் நவக்ரஹங்களும்
நன்மையை மட்டும் அளிக்கும் குணத்தை இங்கு காணலாமே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

சித்துக்கள் பல செய்யும் சித்தர்கள் இங்கு வீற்றிருந்து
சிவனை வணங்கி சிந்தையில் நிறுத்தி அருள் பெற்றனரெ.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

பலவித மூலிகை பலவித அனுபவம் நாமும் உணரலாம்
ஒரு முறையேனும் மலையேறி அந்த உண்மையை உணரலாம்.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......
சதுரகிரி வாரீர் மக்களே சதுரகிரி வாரீர்
லிங்க ஸ்வரூப தேவனைக் கண்டு
மனம் மகிழ வாரீர்.



சதுரகிரியின் வாசா சங்கடங்கள் தீர்க்கும் நேசா
சதுரகிரியின் வாசா சங்கடங்கள் தீர்க்கும் நேசா
பூலோகக் கயிலையிலே பூரிக்கும் புவனேசா
பூலோகக் கயிலையிலே பூரிக்கும் புவனேசா
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா...............
பதினாறு மலைகளிலே பவனி வரும் பினாகினா
பதினாறு மலைகளிலே பவனி வரும் பினாகினா
பவனி வரும் பினாகினா, பவனி வரும் பினாகினா
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா.......
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா....
சதுரகிரியின் வாசா சங்கடங்கள் தீர்க்கும் நேசா....